More

ஐபிஎல் போட்டிகள் எப்படியாவது நடைபெறும்… ஆனால் இந்தியாவில் இல்லை !

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளிநாடுகளில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் 15 வரை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் நடக்கும் என உறுதி அளிக்கபடவில்லை.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்கும் விதமாக பிசிசிஐ புதிய யோசனை ஒன்றை யோசித்து வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம் கழித்து ஏதாவது ஒரு வெளிநாட்டில் நடத்த முடிவு செய்துள்ளதாக என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Published by
adminram