நடிகர் சிம்பு மற்றும் சுசீந்தரன் இணையும் படத்தின் படப்பிடிப்பை 30 நாளில் நடத்த முடிக்க உள்ளாராம் சுசீந்தரன்.
நடிகர் சிம்புவின் படங்கள் எப்போதும் ஆரவாரமாக ஆரம்பிக்கப்படும். ஆனால் அதை எடுத்து முடிப்பதற்குள் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாயில் நுரையே தள்ளிவிடும். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு (?) கொடுப்பார் சிம்பு என்பது கோல்வுட்டில் அவருக்கு இருக்கும் பெயர். இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக நிறைய படங்களில் நடிக்கவில்லை.
இதற்கு சமீபத்தைய உதாரணமாக இருக்கிறது மாநாடு திரைப்படம். எப்போதோ அறிவிக்கப்பட்ட மாநாடு இன்னும் இழுத்துக்கொண்டு கிடக்கிறது. இந்நிலையில் இப்போது சுசீந்தரன் சிம்புவை வைத்து 30 நாட்களில் ஒரு படத்தை இயக்கி முடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது கேட்பவர்களுக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. சிம்புவின் எஸ்டிடி (ஹிஸ்டரிதான்) தெரியாமல் சுசீந்தரன் ஆர்வக்கோளாறில் பேசி வருவதாக பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…