வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அட்லீ முதன் முதலாக இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதன்பின் அவரின் மார்க்கெட் சூடு பிடிக்க தமிழில் பல திரைப்படங்களில் ஜெய் நடித்து முடித்துவிட்டார். ஆனால்,இதில் 80 சதவீதம் திரைப்படங்கள் மொக்கை படங்கள்தான். 90 சதவீதம் தோல்வி படங்கள்தான்.
தற்போது ஹீரோவிலிருந்து இசையமைப்பாளராகவும் அவர் மாறியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஒரு புதிய படத்திற்கு ஜெய்தான் இசையமைப்பாளர்.
இந்நிலையில், அட்லி தனது உதவியாளர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கவுள்ளார். அதேபோல், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் இயக்குனர் பத்ரி இயக்கும் புதிய படத்திலும் ஜெய் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படியே போனால் ஜெய் வில்லன் நடிகராக மாறினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.
இளையராஜாவின் இசை…
நடிகை கீர்த்தி…
சாமானிய மக்களை…
விஷாலின் புதிய…
Coolie Movie:…