More

பாபநாசம் 2-க்கு வாய்ப்பிருக்கா… என்ன சொல்கிறார் இயக்குனர்?

திரிஷ்யம் திரில்லர் படம் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாளத்தில் வெளியான அந்தப் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அது பின்னர் தமிழில் கமல், தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் இந்தியில் அஜய் தேவ்கான் என பல மொழிகளில் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 

Advertising
Advertising

அதன் தொடர்ச்சியாக மலையாளத்தில் திரிஷ்யம் 2 படம் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த அந்தப் படம் மெஹா ஹிட்டடித்தது. இதையடுத்து, தெலுங்கில் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதனால், தமிழில் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது குறித்து ஒரு பேட்டியில் டைரக்டர் பேசியிருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், `பாபநாசம் 2 படம் வருமா வராதா என்பது கமல் கையில்தான் இருக்கிறது. அவர் ரெடி என்றால் நான் எப்போதுமே ரெடி. அரசியல்வாதி கமல் தேர்தலை முடிந்தபிறகு படம் எடுக்கலாம் என்று சொன்னால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். திரிஷ்யம் 3 பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். 

Published by
adminram

Recent Posts