வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி என்றாலே கோலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் ஹிட் தான். இதற்கு முன்னர், பொல்லாதவன், ஆடுகளம், கொடி, வட சென்னை எனத் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். கடைசியாக இருவர் கூட்டணியில் வெளியான அசுரன் படம் மாபெரும் வசூலை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வழங்கப்பட்ட தேசிய விருதையும் அசுரன் படம் வென்றது.
அசுரன் படத்தில் 50 வயது மதிக்கத்தக்க கேரக்டர் சிவகாமியாக நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அந்த கேரக்டர் முதலில் தனுஷிற்கு செல்லவில்லையாம். இரண்டு, மூன்று முன்னணி நடிகர்களுக்கு இந்த சிவகாமி வாய்ப்பு சென்று இருக்கிறதாம். அவர்கள் இந்த வாய்ப்பை ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகே, தனுஷிற்கு சென்றது. தனுஷிடம் இந்த கதையை சொல்லும்போது, யார் மகன் என்ற கேள்வியை தான் கேட்டார். அதுவே எனக்கு ஆச்சரியம் தான் என இயக்குனர் வெற்றிமாறன் தேசியவிருது நன்றி விழாவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, தனுஷ் என்னை நம்பினார். தாணு சார் தொடங்கி மஞ்சு வாரியர் வரை எனக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…