மேலும், தான் வெற்றி பெற்றால் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும், தகுதியான ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைப்பேன் எனக்கூறி அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரின் மாவட்ட செயலாளர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியை கொடுத்தார். ஆனாலும் அவரின் முடிவை பலரும் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்.. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி’ என டிவிட் செய்துள்ளார்.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…