சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில நாட்கள் நடைபெற்றது. 25 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் 9ம் தேதி அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில், ரஜினியும் கலந்து கொள்ளவிருக்கிறார் என செய்திகள் வெளியானது.
வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் ரஜினியே சில பஞ்ச் வசனங்களை ரஜினியே இயக்குனரிடம் கூறுவார். பாஷா படத்தில் பேசியது எல்லாமே ரஜினியின் சொந்த வசனங்கள்தான்.
இந்நிலையில், அண்ணாத்தே படத்திலும் ரஜினி சில பஞ்ச் வசனங்கள் ரஜினிக்கு தோன்றியுள்ளது. அதை இயக்குனர் சிவாவிடம் அவரே போனில் கூறியுள்ளார். அதை மிகவும் ரசித்த சிவா கண்டிப்பாக உங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனக்கூறினாராம்.
நடிகை திரிஷாவின்…
Siragadikka aasai:…
டைரக்டர் ஆனந்த்…
சுந்தர் சி…
Rajini: ரஜினியின்…