8 தோட்டாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்ததாக மோசடி புகாரில் சிக்கினார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை கடுமையாக விமர்சித்தார். எனவே, அவர்களின் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானார். அவர்கள் மீரா மிதுனை கொச்சையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், கோடம்பாக்க சினிமாவே மோசம், அங்கு படுக்கைக்கு சம்பதிப்பவர்களுக்கு வாய்ப்பு என காட்டமாக கூறி வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு, என்னை அசிங்கம் அசிங்கமாக திட்டுகிறார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, வழக்கம்போல் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். சமீபத்தில், கையில் சிகரெட்டுடன் 2 வாலிபர்களுடன் படுகவர்ச்சியாக உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ‘கடிச்சுக்கோ ஐயோ ஜாலி’ என்கிற தலைப்பில் ஒரு ஆல்பம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.
தற்போது அந்த ஆல்பம் தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அதில் ஒவ்வொன்றும் ஆபாசமாக உள்ளது. அதிலும், முன்னழகை அப்பட்டமாக காட்டியும், அவரின் ஆண் நண்பர் அவரது மார்பில் கையை வைத்திருப்பது போலவும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ஓவர் கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் என்பதை அவர் எப்போது உணருவாரோ!
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…
வெங்கட்பிரபு இயக்கத்தில்…