நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக தம்பி திரைப்படம் வெளியானது. அதன்பின் அவரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்து வருகிறார். அதேபோல், ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பின் இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிறுத்தை மற்றும் காஷ்மீரா ஆகிய படங்களில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…