கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. எனவே, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்வது போல ஒரு புகைப்படம் இன்று காலை வெளியாகி சமூகவலைத்தளங்களில் வெளியானது. ஆனால், உற்றுப்பார்த்தால் நயனுக்கு ஊசி போடுபர் கையில் ஊசியே இல்லை. விரல்களை மடித்து சும்மா நயனின் கைகளின் மீது கை வைத்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. எனவே, நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இப்புகைப்படத்தை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது.
அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பார். ஆனால், அப்போது புகைப்படம் எடுக்க தவறியிருப்பார்கள். பின்னர் புகைப்படத்திற்காக இப்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.
அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், இல்லை இல்லை. அந்த படத்தில் தடுப்பூசி இருக்கிறது என நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்து மேலும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
ஏம்மா நயன்தாரா… இது என்னம்மா சோதனை?….
ஒரு பெண்…
Bakkiyalakshmi: இன்றைய…
Actor Vikram:…
விஜய் ஆண்டனி…
Siragadikka Aasai:…