தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா அறிமுகமாக இருந்த படத்தில் இருந்து அவரது வாய்ப்பு பறிபோனது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக இப்போது இருக்கும் நயன்தாரா அறிமுகமான படம் ஹரி இயக்கிய சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம். அதன் பின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் அவர் மீது புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதன் பின் சிம்புவுடனான காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னை பரபரப்பாக வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த காதல் பிரிய அவர் சினிமாவில் முன்னேறிக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் அவருக்கு முதன் முதலாக கிடைத்த வாய்ப்பு குறித்தும் அது பறிபோனது குறித்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா மற்றும் தனுஷ் நடித்த சுள்ளான் ஆகிய படங்களின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன்கள் வேண்டாம் என சொல்லியதால் அந்த வாய்ப்புகள் கைநழுவி போனதாம். ஆனால் அதன் பிறகு அந்த கதாநாயகர்களோடு ஜோடி போட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…