தமிழ் திரையுலகில் எதையும் புதிய கோணத்தில் யோசிப்பவர் ஆர்.பார்த்திபன். எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டமுண்டு. இவர் வித்தியாசமான கோணத்தில் யோசித்து இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதேபோல், அவர் மட்டுமே நடித்து உருவான ஒத்த செருப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல், விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில், அடுத்து ஒரு புதிய படத்தை பார்த்திபன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அனைத்து காட்சிகளும் ஒரே ஷாட்டில் எடுக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். நடிகர் ஒருவர் என்றால் பரவாயில்லை, பலரும் நடிக்கும் இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுப்பது கடினம் என்பதால், படப்பிடிப்பிற்கு செல்லும் முன் ஒத்திகை எடுப்பது சிறந்தது என கருதிய பார்த்திபன் கடந்த ஒரு வருடமாக இப்படத்திற்கு நடிகர், நடிகைகளை வைத்து ஒத்திகை பார்த்து வருகிறாராம்.
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…
தமிழ் சினிமாவில்…
இளையராஜா எவ்வளவு…
சூப்பர் ஸ்டார்…