நடிகர் சிம்புவுக்கு கதை சொல்லியுள்ள மிஷ்கின் அந்த படத்தை அடுத்த ஆண்டுதான் தொடங்க இருக்கிறாராம்.
இயக்குனர் மிஷ்கின் தான் இயக்க இருந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகியது சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பின் அவர் தரப்பும் விஷால் தரப்பும், மாறி மாறி குற்றச்சாட்டுகளை எழுப்பி மேலும் அந்த சர்ச்சையை வளர்த்தன.
இந்நிலையில் மிஷ்கின் அடுத்ததாக சிம்பு நடிக்கும் அஞ்சாதே 2 படத்தை இயக்க இருப்பதாகவும், அதில் வடிவேலு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த படம் இப்போது ஆரம்ப்பிக்கப்பட போவதில்லை. சிம்பு தனது மாநாடு உள்ளிட்ட பட வேலைகளை முடித்துவிட்டு வர ஒரு ஆண்டு ஆகிவிடும். அதனால் மிஷ்கின் அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சாமானிய மக்களை…
விஷாலின் புதிய…
Coolie Movie:…
Raashi kanna:…
Jailer: தமிழ்…