More

திரௌபதி படத்தை பா ரஞ்சித்தை அழைக்கும் இயக்குனர் – வருவாரா ?

திரௌபதி படத்தினைப் பார்க்க வாருங்கள் சகோதரா என இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அந்த படத்தின் விநியோகஸ்தரும் இயக்குனரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

திரௌபதி எனும் ரிலிஸ் ஆகி 3 நாட்கள் ஆகியுள்ள அதைப் பற்றிய பரபரப்புகளும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் அந்த படம் வசூலில் ஹிட் அடித்தாலும் மற்றொரு புறம் விமர்சகர்கள் மத்தியில் கடுமையானக் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அதற்குக் காரணம் இடைநிலை சாதிகளை தூக்கிப் பிடித்தும் தலித் மக்களையும் இழிவாக சித்தரித்தும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதுதான்.

விமர்சனங்களுக்கு ஏற்றார்போல இந்த திரைப்படத்தினை ஒரு சில சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை விநியோகம் செய்துள்ள ஜே எஸ் கே கோபி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித்தை திரைப்படத்தைப் பார்க்க அழைத்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் ‘சகோதரர்

பா.ரஞ்சித் அவர்களுக்கு .. நீங்கள் திரௌபதி படத்தை பார்க்க வர வேண்டும். உங்களை திரௌபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் ட்விட்டர் மூலமாக அழைப்பு விடுகிறேன்.. அனைவரும் சமம் என்ற அம்பத்கார் அவர்களை வார்த்தையை உண்மையாக்க நீங்கள் திரௌபதி படத்தை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை’ எனக் கூறியுள்ளார்.

அந்த டிவீட்டைப் பகிர்ந்த் இயக்குனர் மோகன் ஜி யும் ‘நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram