வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படமெடுப்பார்… ஆனால் தம்பி இல்லாம படம் எடுக்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டலடிக்க்கும் அளவுக்கு வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் நடிப்பவர் பிரேம்ஜி அமரன். சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். சிம்புவோடு மாநாடு படத்திலும் நடித்துள்ள இவர இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தின் ஒரே கல்யாணமாகாத பேச்சிலராக இருக்கிறார்.
இந்நிலையில், பிரேம்ஜி பாலிவுட்டுக்கு போக போகிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?.. இது உண்மைதான்..மாநாடு படத்திற்கு பின் தற்போது பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வரும் டாப்ஸியை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்கும் முயற்சியில் வெங்கட்பிரபு ஈடுபட்டுள்ளார். ஒருவேளை டாப்ஸி நடிக்கவில்லை எனில் வித்யாபாலனை நடிக்க வைக்க வெங்கட்பிரபு முடிவெடுத்துள்ளார். ஆனல், யார் நடித்தாலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரேம்ஜி நடிக்கவுள்ளாராம்..
கோலிவுட்டில் அவர் நடிப்பதையே நம் ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். தற்போது பாலிவுட்டில் அவர் நடித்தால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…