More

ராஜமௌலிக்காக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் !

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தனக்கு சம்பளம் எதுவும் தேவை இல்லை என நடிகர் அஜய் தேவ்கான் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

பாகுபாலி 1&2 ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக அஜய் தேவ்கான் வேடத்திற்காக அவர் ஒரு படத்துக்காக வாங்கும் தொகையைக் கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருந்தும் சம்பளமே வாங்காமல் அவர் நடித்துக் கொடுத்துள்ளாராம். இயக்குனர் ராஜமௌலியுடனான நட்பின் காரணமாக அவர் இலவசமாக நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts