More

விஜய் சேதுபதி போல வருமா?…. புகழ்ந்து தள்ளிய மெகா ஹீரோ!

புச்சி பாபு இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகன் வைஷ்ணவ் தேஜ் – கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்த உப்பன்னா படம் கடந்த வாரம் ரிலீஸானது. கொரோனாவுக்குப் பிந்தைய சூழலில் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்லாது கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் உப்பன்னா படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

Advertising
Advertising

இந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்தது. இதில், தெலுங்கின் முன்னணி ஹீரோவும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் தேஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், கொரோனாவுக்குப் பின் தெலுங்கு சினிமாவுக்கு உப்பன்னா போன்ற படங்கள் புத்துயிர் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், உப்பன்னா கதையை சிரஞ்சீவி 4 முறை கேட்டதாகவும், தன்னுடைய படத்தின் கதையைக் கூட அப்படி கேட்டதில்லை என்று கூறிய அவர், வைஷ்ணவ் தேஜின் வளர்ச்சிக்காகத் தனது சித்தப்பா பவன் கல்யாண் நிறைய உதவியதாகவும் குறிப்பிட்டார்.

ரிஸ்கான இந்த கதைக் களத்தை எடுத்துப் படமாக்கிய இயக்குனர் புஜ்ஜி பாபுவைப் பாராட்டிய ராம்சரண், நடிகை கீர்த்தி ஷெட்டியின் நடிப்பையும் பாராட்டினார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி குறித்து பேசிய ராம்சரண்,“எனக்கு விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது’’ என்று ஈகோ எதுவும் பார்க்காமல் ஏகத்தும் புகழ்ந்து தள்ளினார். 

 

Published by
adminram

Recent Posts