ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அந்த படத்துக்குப் பின் ஆண் தேவதை படத்தில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் வாய்ப்புகளைக் கவரும் பொருட்டு சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதனால் அவருக்கான ஆர்மியும் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து ரசிகர்கள் மனதை குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கவர்ந்தார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அதற்காக ஸ்டார் ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது.
அப்படி மட்டும் நடந்துவிட்டால் நிச்சயம் ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என யூகிக்க முடிகிறது. காரணம் ரம்யா பாண்டியனுக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இளசுகளை மயக்க கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கமாட்டார். அதிலும் தமிழ் பெண் என்பதால் சேலையில் சில நேரம் அடக்கம் ஒடுக்கம் காட்டுவார். எல்லாவற்றிற்கும் மேல் அவர் மிகவும் அமைதியான நகைச்சுவை குணம் கொண்டவர் யாருடனும் வீண் சண்டை இழுக்கமாட்டார். எனவே ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் ஓட்டு மலை போல் குவிந்து சுலபமாக டைட்டில் வெல்வார் என நம்பலாம்.
தமிழ் சினிமாவில்…
இளையராஜா எவ்வளவு…
சூப்பர் ஸ்டார்…
செவன்த் சேனல்…
Ajith TTF…