காதல் கொண்டேன் படம் மூலம் சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வராகவன். அதன்பின் அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார்.
இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால், அவர்கள் ஏன் பிரிந்தனர் என்பதற்கான இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது அது லீக் ஆகியுள்ளது.
சோனியா அகர்வாலுக்கு பிகை மற்றும் மது என 2 பழக்கமுமே உண்டு. படப்பிடிப்பு தளத்திலேயே அவர் சிகரெட் பிடிப்பார். இதெல்லாம் தெரிந்துதான் செல்வராகவன் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின்பும் சோனியா அகர்வால் திருந்தவில்லையாம்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பின் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 3வதாக கீதாஞ்சலி கர்ப்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சோனியா அகர்வால் 2வது திருமணம் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி, இளமையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…