தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் “ஹே மாய சேசாவே” படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து பின்னர் 8 வருடங்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் சமந்தா கவர்ச்சியை எப்போதும் போலவே காட்டி வருகிறார். மாமனார், மாமியார், புருஷன் , மைத்துனன் என எல்லோரும் திரைத்துறையை சார்ந்தவர்கள் என்பதால் சமந்தாவுக்கு முழு நடிப்பு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
அதை பயன்படுத்திக்கொண்ட சமந்தா நல்ல படங்கள் என்றால் கதைக்கு தேவையான அத்தனையும் செய்து கொடுக்கிறார். அந்தவகையில் அண்மையில் வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரில் மோசமாக நடித்ததால் புருஷனுக்கு பிடிக்காமல் போக சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் அடித்து வருகிறார். வாழ்க்கையை கோட்டை விட்டுட்டு வருத்தமேயில்லாமல் சுற்றி திரியுறியே சம்மு என்கிறது ரசிகர்கள் வட்டாரம்…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…