Connect with us

விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட சந்தானம்!..

latest news

விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட சந்தானம்!..

நடிகர் விஜய்யை முதன்முறையாக அரசியலில் இழுத்து விட்டதே நான் தான் என நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஆர்யா தயாரிப்பில் ஹீரோவாக டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்துள்ள சந்தானம் திரும்பும் பக்கம் எல்லாம் சர்ச்சைகள் வெடிப்பது போல வெடிக்க ஆரம்பித்துள்ளது.

எல்லாமே படத்தின் புரமோஷனுக்காக பயன்படும் என செய்கிறாரா இல்லை அவரை சுற்றி நடக்கிறதா என்றே தெரியவில்லை. கிஸ்ஸா பாடலில் “கோவிந்தா கோவிந்தா” என சுப்ரபாதம் ட்யூன் இடம்பெற்றுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானை சந்தானம் சதாய்க்கிறார் என எடப்பாடி பழனிசாமியிடம் பவன் கல்யாண் கட்சியான ஜன சேனா கட்சி நிர்வாகிகள் புகார் அளிக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் பிரச்சாரம் செய்ய போவேன் என சந்தானம் சொன்னதால் அதிமுகவினர் சந்தானத்தின் மீது கொலை வெறியில் உள்ளனர். இந்நிலையில், கோவிந்தா சர்ச்சையும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு சிக்கலை உண்டாக்கும் என தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள், மீடியாக்கள் என தன்னை நம்பி நண்பன் ஆர்யா பணம் போட்ட நிலையில், புரமோஷனில் பிசியாகி வருகிறார் சந்தானம். அப்படி ஒரு பேட்டியில் சந்தானத்திடம் விஜய்யின் தலைவா படத்தில் அவர் பேசிய வசனம் பற்றி கேட்கும் போது, தலைவா படம் ரிலீஸ் தள்ளிப்போகவே காரணம் நான் பேசிய வசனம் தான்னு விஜய் சொன்னார் எனக் கூறியுள்ளார்.

தலைவா படம் ஏன் தளபதி சொன்ன டேட்ல ரிலீஸ் ஆகலன்னு தெரியாம கேட்டுட்டேன், நீ பாட்டுக்கு போற போக்கில், “அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உன்கிட்ட இருக்குன்னு டயலாக் பேசிட்ட” அது சிலருக்கு பிடிக்காமல் தான் பஞ்சாயத்து என்றார். விஜய்யை முதல் முதலாக அரசியலில் இழுத்து விட்டது நான் தான்னு நினைக்கிறேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top