கொரோனாவுக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸாகும் தமிழ்ப் படங்கள் எண்ணிக்கைக் குறைந்துவிடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுனால் 5 மாதங்களால் திரையரங்கங்கள் மூடப்பட்டு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளன. இதனால் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும் போது என்னென்ன மாற்றங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. மேலும் தியேட்டர்களின் டிக்கெட் விலை அதிகமாகுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனால் தமிழ் சினிமாவின் நிலை வெகுவாற மாறும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி தமிம் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் ‘கொரோனாவுக்கு பின் தமிழ் சினிமாவின் முன்னணி 10 ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே தியேட்டருக்காக எடுக்கப்படும். அவர்களை இயக்கும் 25 இயக்குனர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வேறு தளங்களுக்கு இடம்பெயர்வார்கள். இதனால் நம் கதை சொல்லல் முறையில் மிகப்பெரிய மாற்றம் வரும்’ எனக் கூறியுள்ளார்.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…