More

மீண்டுன் படப்பிடிப்பு..! விஜய் ஆண்டனியை பார்த்து கத்துக்குங்கப்பா…

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதலே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, கடந்த 5 மாதங்களாக எந்த நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்புகளுக்கு தடை நீக்கப்பட்டாலும் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழ அரசு தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், ரஜினி, விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் யாரும் படப்பிடிப்பிற்கு வர தயாராக இல்லை எனத்தெரிகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே படப்பிடிப்பிற்கு செல்வோம் என அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என முடிவெடுத்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில்  ‘என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான்  படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்’ என டிவிட் செய்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts