கன்னடத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற கேஜிஎஃப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை முடித்து இருக்கும் இவர் தற்போது சலார் படத்தினை இயக்கி வருகிறார். பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
பிரபாஸிற்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் மீண்டும் ஒரு மாஸ் ஹீரோக்களை ஒரே படத்தில் காண முடியும்.
இந்நிலையில், பிரபாஸின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதை அவரின் பிறந்தநாளான இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுவே பிரபாஸும் ஸ்ருதியும் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…