More

ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு – அதிரடி அறிவிப்பு

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் மட்டும் 81 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டுக்கும் இந்த நோய் மெல்ல மெல்ல பரவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தமிழக அரசு மறைத்து வருவதாக செய்திகள் எழுந்துள்ளது.

Advertising
Advertising

அதேசமயம், தமிழகத்தில் இந்நோய் பரவாமல் இருக்க பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் அனைத்தையும் 31ம் தேதி வரை மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் கும்பலாக கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க நடைமேடை கட்டணம் ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

Published by
adminram

Recent Posts