நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக பிரமுகர் ஒருவர் தனது மகனின் காதலியைக் கடத்தி சென்று தாலி கட்டிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக பிரமுகர் கருப்பு நித்யானந்தம். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகனான முகேஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த கருப்பு நித்யானந்தம் தனது மகனின் காதலிக்கு போன் செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அதுசம்மந்தமாக பேச அவரைத் தனியாக் அழைத்துள்ளார்.
அதை நம்பி அந்த பெண் தன் காதலனிடம் கூட சொல்லாமல் வருங்கால மாமனாரைப் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றபின் நித்யானந்தம் அந்த பெண்ணின் செல்போனைப் பிடுங்கிக்கொண்டு அவருக்குக் கட்டாயமாகத் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை இரண்டு நாட்கள் தனியாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் தன் நண்பரின் வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
தந்தையின் திட்டம் அறிந்த மகன் முகேஷ் தனது காதலியைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் தனது தந்தையின் மேல் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். போலீஸார் முகேஷின் தந்தையையும் அவருக்கு உதவி செய்த கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…