மங்காத்தா 2 படத்தின் கதையை வெங்கட் பிரபு எப்போதோ எழுதிவிட்டதாக அவரின் நண்பர் சுப்பு பஞ்சு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது மங்காத்தா. அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தா மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் முடிவிலேயே பார்ட் 2 வுக்கான லீட் விடப்பட்டு முடித்திருந்தார் வெங்கட் பிரபு. இதனால் இந்த படத்தின் பார்ட் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான சுப்பு பஞ்சுவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு ’10 ஆண்டுகளுக்கு முன்பே பார்ட் 2 கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டார். அஜித் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது ஷூட்டிங் தொடங்கிவிடலாம்’ என சொல்லியுள்ளார்.
Actor Simbu:…
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…