More
Categories: Cinema News latest news

நீயெல்லாம் ஞானியா?.. இளையராஜாவுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த வைரமுத்து!.. இப்படி சொல்லிட்டாரே!..

சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இசைப் பெரியதா? பாடல் பெரியதா? என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா தனது இசை தான் அனைத்தையும் விடப் பெரியது என்றும் இசையை உருவாக்கியதற்கு தான் பாடல் சொந்தம் என்றும் காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமீபத்தில் பாடலாசிரியரும் பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்கிற கேள்வியை எழுப்பினர். இந்நிலையில், அதே போன்ற கருத்தை பாடலாசிரியர் வைரமுத்து எழுப்பி உள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பிரசாந்துக்கு சிவாஜி சொன்ன 3 அட்வைஸ்!.. கோட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!.. தியாகராஜன் நெத்தியடி!

ஒரு பாடலுக்கு வரிகளும் இசையும் இன்றியமையாத ஒன்று என்றும் இரண்டும் கலந்தால் தான் அது பாடல் எனக் கூறியுள்ளார். இது தெரியாதவன் ஞானியே கிடையாது அஞ்ஞானி என இளையராஜாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மனிதர்களுக்கு பெயர் வைத்தால் தான் அவர்கள் இன்னார் என அறியப்படுவார்கள். பெயர் இல்லாமல் இருந்தால் எப்படி அழைப்பார்கள். சின்ன சின்ன ஆசை பாட்டு பாடுங்கள் என்று தான் சொல்வார்கள். அதன் ராகத்தை யாரும் சொல்லி பாட சொல்ல மாட்டார்கள் என வசதியாக ஏ ஆர் ரகுமான் பாடலை மேற்கோள் காட்டி நெத்தியடி அடித்து விட்டார்.

இதையும் படிங்க: கமல் கையை வச்சே இந்தியன் தாத்தா கண்ணை குத்தும் கல்கி!.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சே!..

நல்ல படைப்பு எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் அந்த காலப் பாடல்கள் இன்னமும் மக்களால் கொண்டாடப்பட்டு வருவதற்கு காரணமே பாடலை எழுதிய கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள் தான் என்றும் திருக்குறள் 17 நூற்றாண்டுகள் காணாமலே போய்விட்டது. ஆனாலும் அதன் வீரியம் காரணமாக 19 ஆம் நூற்றாண்டில் வெளிவந்து மற்ற அனைத்துக்கும் தலைமை நான்தான் என நிரூபித்துள்ளது.

பாடல் வரிகளும் இசையும் இரண்டுமே ஒரு சிறந்த பாடல் உருவாக காரணமாக உள்ளது என்பதை யாரும் மறக்கக்கூடாது என படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

Published by
Saranya M

Recent Posts