More
Read more!
Categories: Cinema News latest news television

கோபியை காலி பண்ண காத்திருக்கும் ராதிகா… நடுக்கத்தில் ஈஸ்வரி… சிக்கிட்டீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸவரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்கிறார். பாக்கியா நைட் சரியா தூங்கலையா எனக் கேட்க அதெல்லாம் நான் நல்லா தான் தூங்கினேன் என்கிறார். அப்போ அங்கு வரும் செல்வி என்னம்மா சந்தோஷத்தில் தூங்கலையா எனக் கூறுகிறார்.

ஈஸ்வரி எனக்கு என்ன சந்தோஷம் எனக் கேட்க கொள்ளு பாட்டி ஆகிட்டு மறுபடியும் பாட்டி ஆக போறீங்களே. உங்க மருமகளும் கர்ப்பமா இருக்காங்க சந்தோஷம் இருக்காதா என்கிறார். நீ இருக்கும் போது பாக்கியாவிடம் இதை பேசி இருக்க கூடாது. இந்த விஷயத்தினை ஊரு முழுக்க டமாரம் போட்டுடாதே என்கிறார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி அப்புறம் பாப்போம்!. டீலில் விட்ட அஜித்!.. குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்டார்ட்!..

நான் இனியா பொறந்ததுலேந்து இங்க வேலை செய்றேன். ஒரு விஷயத்தினையும் வெளியில் சொல்லி இருக்கேனா? நானும் இந்த குடும்பத்தில ஒரு ஆளு தானே என்கிறார். அதன்பின், பாக்கியாவை அழைத்து உட்கார வைக்கும் ஈஸ்வரி உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையா எனக் கேட்கிறார். எனக்கு என்ன அத்தை கஷ்டம் நானா வலி வந்து பெத்துக்க போறேன். ஈஸ்வரி பாவம் கோபி எனப் பேச வர எனக்கு வேலை இருக்கு அத்தை.

நான் போறேன் என பாக்கியா கிளம்பி செல்கிறார். அதன் பின், எழிலிடம் அமிர்தா குழந்தை பற்றி பேசுகிறார். அவர் நான் ஒரு படம் எடுக்கணும். அது முடிஞ்ச பிறகு பார்க்கலாம் என்கிறார். கோபி வாக்கிங் சென்று வீட்டுக்குள் நுழைகிறார். அப்போ விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்வதாக ராதிகாவிடம் கூறிவந்தது நியாபகம் வருகிறது. எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்க சொல்லலாம் என உள்ளே செல்கிறார்.

ஆனால் எல்லாரும் சந்தோஷமா இருக்கும் நேரத்தில் கெடுக்க கூடாது என கோபியை அங்கிருந்து துரத்துகிறார் ஈஸ்வரி. ரூமுக்கு வரும் கோபியிடம் ராதிகா விஷயத்தினை சொல்லிட்டீங்களா எனக் கேட்கிறார். எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது கெடுக்க கூடாதுனு தான் சொல்லலை என்கிறார். அப்போ மத்தவங்க சந்தோஷம் தான் முக்கியம். என்னை பத்தி கவலையே இல்லை. நீங்க சொல்லலைனா நானே சொல்லிட்டு வீட்டை விட்டு போயிட்டே இருப்பேன் என பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?

கோபி இன்னைக்கு நைட்டுக்குள் சொல்லிவிடுவதாக கூறுகிறார். ஜெனி மற்றும் அமிர்தா பேசிகொண்டு இருக்கின்றனர். அப்போ ஈஸ்வரி, ஜெனியிடம் சுடு தண்ணீர் கேட்க அமிர்தா நீங்க இருங்க எனக் கூறி எடுத்து சென்று கொடுக்கிறார். அமிர்தாவிடம் ஜெனி பாட்டி என்னிடம் தானே கேட்டாங்க. நீங்க எதுக்கு கொடுத்தீங்க. என்னிடம் கேட்டா நான் தானே கொடுக்கணும். அப்புறம் பாட்டி என்னை வேலையே செய்யலைனு நினைப்பாங்கள.

என் வேலையை நானே செஞ்சிக்கிறேன். முடியலைனா மட்டும் உங்ககிட்ட உதவி கேட்கிறேன் எனக் கூறுகிறார். ஈஸ்வரியை போய் பார்க்கும் ஜெனி நான் பாப்பாவை வச்சி இருந்ததால தான் பாட்டி அமிர்தா கொண்டு வந்தாங்க என்கிறார். அதெல்லாம் பரவாயில்லை எனக் கூறும் ஈஸ்வரி குழந்தையை வாங்கி கொஞ்சுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: அஜித் கொடுத்தது ஆஃபர் இல்ல! ஆப்பு.. சும்மானாலும் இருந்திருப்பேன்! வேதனையில் தயாரிப்பாளர்

Published by
Akhilan

Recent Posts