இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ நிறைய விஷயங்கள் பேசினோம். இதில் அனைவருக்கும் திருப்தி. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. ஏமாற்றமே. அது என்னவென்று அப்புறம் சொல்கிறேன்’ எனக்கூறினார். செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேட்டும் எது அவருக்கு ஏமாற்றத்தை தந்தது என அவர் தெரிவிக்கவில்லை. ரஜினியின் இந்த பேட்டி அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது ரஜினியின் ஏமாற்றத்திற்கான காரணம் வெளியே தெரியவந்துள்ளது. எப்படியாவது ஒரு கோடி பேரை தனது கட்சியில் இணைக்க வேண்டும் என்கிற அசைன்மெண்டை தனது மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி கொடுத்திருந்தாராம். ஆனால், அதை அவர்களால் செய்ய முடியவில்லையாம். எனவே,இதுவே ரஜினிக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Actor Rajini:…
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…