தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் வசிப்பவர் ஜி.பி.முத்து. டிக்டாக் ஆப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரின் மண் சார்ந்த பேச்சு பலரையும் கவர்ந்தது.
அதேநேரம், டிக்டாக்கால் இவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகளும் ஏற்பட்டது. மரக்கடை ஒன்றை நடத்தி வரும் கடந்த சில மாதங்களாக வியாபாரத்தை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். மேலும், டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்ட சோகத்திலும் இருந்துள்ளார்.
மேலும், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…