More

100ஐ தாண்டியும் அதிகரிக்கும் பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

கடந்த பிப்ரவரி மாதம் முதலே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.90 ஐ தாண்டியது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து சமீபத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டது. அதேபோல், டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 100.75 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.93.91 எனவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.101.06 எனவும், டீசல் 15 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.94.06 எனவும் விற்பனையாகிறது. இன்று காலை முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்வது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
 

Published by
adminram