More

விஜய்க்கு கதை ஓகே… இப்படி பண்ணிட்டாரே நெல்சன்!.. புலம்பும் சிவகார்த்திகேயன்?..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருந்த புதிய திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிய பின், அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் எழுந்துள்ளது. 

Advertising
Advertising

இந்நிலையில், கோலமாவு கோகிலா  பட இயக்குனர் நெல்சன் கூறிய கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் அவரை விஜய் தேர்ந்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தை முடித்த பின் அவர் விஜய் படம் தொடர்பான வேலையை துவங்குவார் எனத்தெரிகிறது.

விஜய்க்கு கூறிய கதையை முதலில் சிவகார்த்திகேயனிடம்தான் நெல்சன் கூறியிருந்தாராம். எனவே, டாக்டர் படத்திற்கு பின் அதுபற்றி யோசிப்போம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்திருந்த நிலையில்தான், அந்த கதையை விஜய்க்கு கூறி சம்மதம் பெற்று விட்டார் நெல்சன். 

எனவே, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துமா என்றால். அதுதான் இல்லையாம். விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஒரு நல்ல நட்பு உண்டு. தான் நடிக்க வேண்டிய கதையில் விஜய் நடிப்பது பெருமைதான் எனவும் சிவகார்த்திகேயன் கூறியதாக கேள்வி.

Published by
adminram

Recent Posts