விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. எப்படி இருந்தாலும் படம் நிச்சயம் ஓடிடியில் ரிலிஸ் ஆகாது திரையில் தான் என்பதை படக்குழு ஆணித்தரமாக கூறிவிட்டனர்.
இதையடுத்து வருகிற பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தை திரையாங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஃபைனல் எடிட் செய்த மாஸ்டர் படத்தை விஜய் , லோகேஷ் உள்ளிட்பட படக்குழுவினர் அனைவரும் பார்த்துள்ளனர்.
படம் பார்த்து முடித்ததும் விஜய் லோகேஷை கட்டித் தழுவி ரொம்பவே ஹேப்பி.. படம் நல்லா வந்திருக்கும் நிச்சயம் நாம் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் பண்ணலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் லோகேஷ் ஒரே ஹேப்பி மூடில் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
Winner Movie:…
இளையராஜாவின் இசை…
நடிகை கீர்த்தி…
சாமானிய மக்களை…
விஷாலின் புதிய…