">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆதித்ய வர்மா திரைப்படத்தின் தயாரிபபாளரை ஏமாற்றிய விக்ரம்… அதனால்தான் இப்போ இந்த முடிவு!
துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய வர்மா திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடி பிளாட்பார்மில் ரிலிஸ் ஆக உள்ளது.
துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய வர்மா திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடி பிளாட்பார்மில் ரிலிஸ் ஆக உள்ளது.
இயக்குனர் பாலா விக்ரம்மின் திரைவாழ்க்கைக்கு அச்சாரம் இட்டவர். அதே போல தனது மகனின் முதல்படமும் பாலா இயக்கத்தில் இருக்க வேண்டுமென விக்ரம் விரும்பினார். அதனால் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கை இயக்க சொல்லிக் கேட்டார். விக்ரம்முக்காக அதை ஒத்துக் கொண்டார் பாலா. ஆனால் பாலா இயக்கிய படத்தில் விக்ரமுக்கு திருப்தியில்லை என்பதால் அதைக் கிடப்பில் போட்டனர்.
இதனையடுத்து அந்த படம் மீண்டும் அர்ஜுன் ரெட்டி இயக்குனரின் உதவி இயக்குனர் கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வர்மா ரிலிஸ் செய்யப்படுவதற்கு முக்கியமானக் காரணம் விக்ரம்தானாம். தயாரிப்பாளருக்கு தருவதாக சொன்ன பணத்தை விக்ரம் தராததால் இந்த படத்தை ஓடிடி க்கு கொடுத்தாலாவது ஒரு தொகை கிடைக்குமே என்ற ஆசையில்தான் இப்போது அதை ரிலிஸ் செய்கிறார்களாம்.