More

மீண்டும் தூமின் அடுத்த பாகம்… நாயகனுக்கு வில்லன் இல்லை வில்லி… பாலிவுட்டில் சலசலப்பு

தூம் படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. இந்த படங்களில் நாயகனை விட வில்லன்களுக்கே மவுஸ் அதிகம். அந்த வகையில் முதல் பாகத்தில் ஜான் அபிரகாம், இரண்டாவது பாகத்தில் ஹ்ரித்திக் ரோஷன், மூன்றாவது பாகத்தில் அமீர்கான் நடித்து இருந்தனர். படமும் செம வசூலை அள்ளி குவித்தது. சஞ்சய் காத்வி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளர். ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் சோப்ரா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Advertising
Advertising

தற்போது இப்படத்தின் நான்காவது பாகம் உருவாக இருக்கிறது. முக்கிய வேடங்களில் அபிஷேக் பச்சனும், உதய் சோப்ராவும் நடிக்க உள்ளனர். தொடர்ந்து, அவர்களின் நாயகிகள் வேட்டை நடைபெற்று வருகிறது. எல்லா பாகங்களை போல இந்த படத்திலும் டாப் வில்லனே தேவைப்படுகிறதாம். அந்த வகையில், நடிகரை அணுகாமல் படக்குழு டாப் நாயகியான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஏற்கனவே, பிஸியாக இருக்கும் தீபிகாவின் கால்ஷீட் இதுவரை கிடைக்கவில்லை. அவர் ஒப்புக்கொண்டப்பின் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts