More

அத செலவு பண்ணிட்டோம்… திருடிய பணத்தைக் கேட்ட போது வடிவேலு பாணியில் பதில் சொன்ன பெண் !

சென்னையில் வீட்டு வேலை செய்துவந்த லட்சுமி என்ற பெண் அந்த வீட்டில் 5 லட்ச ரூபாய் திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.

Advertising
Advertising

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் லட்சுமி (40).கணவரை விட்டுப் பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு மகள்கள். தற்போது சென்னையில் அண்ணாநகரில் உள்ள புஜ்ஜியம்மாள் (49) என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் புஜ்ஜியம்மாள் கடந்த கடந்த மாதம் தன்னுடைய பீரோவில் வைத்திருந்த 5 லட்ச ரூபாயை நேற்று தேடிய போது அது காணாமல் போயுள்ளது. இதையடுத்து போலிஸில் புகார் கொடுத்த அவர், லட்சுமி மேல் சந்தேகம் இருப்பதாக சொல்லியுள்ளார்.

இதையடுத்து போலிஸார் லட்சுமியையும் அவரது காதலரையும் பிடித்து விசாரணை செய்த போது திருடியதை ஒத்துக் கொண்டனர். மேலும் திருடிய பணத்தைக் கேட்ட போது அதைத் தனது மகளின் திருமணத்துக்காக செலவு செய்துவிட்டதாக சொல்லிய லட்சுமி கையில் 5000 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts