தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அவர் சினிமாவில் மார்கெட் இருக்கும் போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார்.
தற்போது டிக்டாக்கிலும் இணைந்துள்ள அவர் வாலி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஏப்ரல் மாதத்தில்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் இப்போதும் நீங்கள் இளமையாகவே இருக்கிறீர்கள். உங்கள் நடனமும் அப்படியே இருக்கிறது என பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை டிக்டாக் மூலம் நடித்து காட்டியுள்ளார். ஆனால், அதைக்கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
Namitha Ajith:…
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…