More

எஸ்.பி.பி உடல் நிலை உண்மை நிலவரம் என்ன? – மருத்துவமனை அறிக்கை…

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டது.

Advertising
Advertising

இன்று காலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் சரண் கொரோனா பரிசோதனையில் அப்பாவிற்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. 

ஆனால், இந்த தகவலை சரண் மறுத்துள்ளார். எஸ்.பி.பியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். என் தந்தையுன் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் பேசிவிட்டு இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும், என் தந்தையின் உடல் நிலை பற்றி யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வெண்டிலேட்டர் மற்றும் எக்மோர் கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது.  அவரின் உடல்நிலையை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published by
adminram

Recent Posts