More

சந்தானம் என்ன ஆச்சு?.. சிவாவுடன் இணையும் தில்லுக்கு துட்டு இயக்குனர்

விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற லொல்லு சபாவை இயக்கியவர் ராம்பாலா. சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என 2 திரைப்படங்களை இயக்கினார். 2 திரைப்படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இந்நிலையில், மெர்ச்சி சிவாவை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஆனந்தராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக நடிக்க நிக்கி கல்ராணியிடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் எனத்தெரிகிறது. 

இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts