இந்தியாவில் லாக் டவுன் காரணமாக மாஸ்டர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் திரைப்படங்கள் வெளியாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதில் சிக்கிக்கொண்ட முக்கியமான திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் ஒன்று. இன்னும் சில வாரங்களில் லாக்டவுன் நீக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் முதல்படமாக வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் தயாரிப்பாளர் கேயார் மாஸ்டர் முதல்படமாக வந்தால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் சூழல் உருவாகலாம். அதனால் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும்தான் அவப்பெயர் ஏற்படும். இதனால் மாஸ்டர் படத்தின் ரிலிஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
இன்று சமூகவலைத்தளங்களைத்…
ஆந்திராவை சேர்ந்தவர்…
Actor Ajith:…
தமிழ்த்திரை உலகில்…