கமல் நான்கு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன்.
இந்த படத்தில் ஊர்வசி, குஷ்பு, ரூபினி, நாகேஷ், மனோரமா மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதிய இந்த திரைப்படத்துக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இன்றளவும் இந்த படம் கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவிடம் இதன் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என சொல்லியுள்ளார். ஏனென்றால் அந்த படத்தில் நடித்த நாகேஷ், மனோரமா ஆகியோர் இப்போது உயிரோடு இல்லை. மேலும் அதில் கைவைக்க நான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
திருவிளையாடல் புராணத்தில்…
இளையராஜா, வைரமுத்து…
Bakkiyalakshmi: இன்றைய…
நடிகை திரிஷாவின்…
Siragadikka aasai:…