‘மதகஜராஜா’ ஏன் வெற்றியாச்சு.. ஒய்ஜி மகேந்திரன் சொன்ன காரணம்.. உண்மைதானே

களை கட்டிய மதகஜராஜா: பொங்கல் ரிலீஸுக்கு வெளியாகி களைகட்டிய திரைப்படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்க கூடவே சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2013 ஆம் ஆண்டே இந்தப் படம் வெளிவர வேண்டியது.
பெரிய ஹிட்: ஆனால் சில பொருளாதார நெருக்கடியால்தான் இந்தப் படம் தள்ளிப்போய் கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து படம் வெளியாகி மிகப்பெரிய எண்டெர்டெயின் படமாக மாறியது. அதிலும் ஒரு காமெடி திரைப்படமாக வெகு நாள் கழித்து குடும்பமாக வந்து சிரித்து மகிழ்ந்த படமாக மதகஜராஜா படம் மாறியது. ஹிட் இல்லை. மிகப்பெரிய ஹிட்டாக மாறியது. இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய மாற்றத்தை இந்தப் படம் கொண்டு வந்திருக்கிறது.
தொடந்து வாய்ப்பு: அதுவரை விஷாலை ஒரு மாதிரி பேசி வந்தவர்கள் இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்ப அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் விஷாலை தேடி வந்த வண்ணம் இருக்கின்றன. மீண்டும் சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு முழு காமெடி திரைப்படமாக படம் வெளியானது.
கொண்டாட காரணம்: 12 வருடத்திற்கு பிறகு ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதுவும் இவ்ளோ தைரியத்தோடு ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தின் கண்டெண்ட் மேல் உள்ள நம்பிக்கையில்தான். அதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது. இன்று வரை இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். நேற்று வெளியான விடாமுயற்சி படத்தின் கலெக்ஷனை கூட மதகஜராஜா படத்தின் கலெக்ஷனோடு ஒப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதகஜராஜாவின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் கூறியிருக்கிறார். படம் இவ்ளோ தூரம் வெற்றியடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஃபேமிலி ஆடியன்ஸ்தான். மீண்டும் கிட்ஸ்கள் திரையரங்கிற்குள் வந்து விட்டனர். இவ்ளோ நாளாக சின்ன குழந்தைகள் படங்களை பார்க்க முடியவில்லை. ஏனெனில் படம் அந்தளவுக்கு வன்முறையாக இருந்தது.
ஆனால் இந்தப் படம் கத்தியின்றி ரத்தமின்றி படமொன்று வருகுது போல குடும்பமாக பார்க்க வேண்டிய படமாக இருந்ததனால்தான் இவ்ளோ தூரம் படம் வெற்றியடைந்திருக்கிறது. இதைத்தான் இப்போது ஆடியன்ஸ்களும் எதிர்பார்க்கின்றனர் என்று ஒய்ஜி மகேந்திரன் கூறியிருக்கிறார்.