நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருக்க தகுதியே இல்லை. இந்த வருடம் அவரை பிக்பாஸ் நடத்தவே விடமாட்டேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டியுள்ளார். காரணம், சென்ற ஆண்டு பிக் பாஸில் சேரன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை ஒரு நடுவராக தட்டி கேட்காமல் அவருக்கு ஆதரவாக நின்றீர். அந்த வீடியோ கிளிப்பை வெளியிடவேண்டும் இல்லையெனில் உங்கள் மீது வழக்கு தொடர்வேன் என கூறி சவால் விட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…