Categories: Cinema News latest news

எத காட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே.. வருத்தத்தில் நம்ம தமிழ்நாட்டு பைங்கிளி.!

பொதுவாக திரைத்துறையில் ஒரு நடிகைக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றால் கவர்ச்சியில் களம் இறங்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை அஞ்சலியும் கூட அப்படித்தான். தமிழில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காதல், தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

ஆம், சமீபத்தில் மச்சர்ல நியோஜகவர்கம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் நிதினுடன் மிகவும் கவர்ச்சியாக “ரா ரா ரெட்டி” என்ற பாடலில் நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- சமந்தாவுக்கு முன்னாள் கணவரின் ஞாபகம் வருகிறது போல… என்ன செய்துள்ளார் பாருங்க…

இப்படி கவர்ச்சியில் களமிறங்கி நடித்தால் பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்து இந்த முடிவை அஞ்சலி எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அஞ்சலிக்கு தற்பொழுது பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எதுவுமே வரவில்லையாம்.

இதனால் கவர்ச்சியையும் காட்டியாச்சு இதற்கு மேல் என்னதான் செய்ய ..? என தனது நண்பர்களிடம் வருத்தத்துடன் அஞ்சலி புலம்பி வருவதாக  சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க படுகிறது. மேலும் அஞ்சலி தற்பொழுது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan