
Cinema News
நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.
Published on
By
Ajithkumar: அமராவதி திரைப்படத்தில் சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் அஜித்குமார். அதன்பின் தொடர்ந்து அது போன்ற வேடங்களில் நடித்தார். தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார். அமர்க்களம், சிட்டிசன், பில்லா, தீனா போன்ற படங்கள் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது.
மங்காத்தா திரைப்படம் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. பல வருடங்களாகவே விஜய்க்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் அஜித். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். பல காரணங்களால் தடைபட்ட இந்த படம் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…
இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புகொண்டிருக்கிறார். இப்போதுதான் அஜித் இயக்குனர்களை பல வருடங்கள் காக்க வைக்கிறார்.
தன்னிடம் கதை சொல்லிவிட்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதால் இப்போது வரை அவருக்கு அஜித் கால்ஷீட் கொடுக்கவில்லை. நான் கடவுள் படம் உருவான போது பாலாவுடன் பஞ்சாயத்து நடந்தது. அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என 2 படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் கடந்த 10 வருடங்களாக அஜித்துக்காக காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: நடு விரலை காட்ட சொன்ன ஆதிக்!.. அஜித் ரியாக்ஷன் என்ன தெரியுமா?.. பிரபலம் சொன்ன பலே மேட்டர்!..
யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர் என முடிவு செய்யும் இடத்தில் அஜித் இருப்பதால் இதுவெல்லாம் நடக்கிறது. பல தயாரிப்பாளர்களுக்கு அஜித் கால்ஷீட் கொடுப்பதிலை. தனக்கு பிடித்த, பிரச்சனை இல்லாத குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அவர் கால்ஷீட் கொடுக்கிறார்.
sundar
ஆனால், வளரும்போது அஜித் இப்படி இல்லை. இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் தேடிப்போய் வாய்ப்பு கேட்டவர்தான். சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ஒரு நாள் நள்ளிரவு 12.30 மணி இருக்கும். என் உதவியாளர் என்னை எழுப்பினார். வெளியே ஒரு நடிகர் வந்திருப்பதாக சொன்னார். அப்போதுதான் அஜித்தை முதன் முதலாக சந்திக்கிறேன். ‘உங்கள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என கேட்டார். அப்படி உருவான படம்தான் உன்னைத்தேடி’ என சுந்தர் சி சொல்லி இருக்கிறார். இந்த படம் 1999ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....