Categories: Cinema News latest news

தனுஷின் விவாகரத்தை அன்றே கணித்தாரா அண்ணன் செல்வராகவன்.?!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் அளவில் பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தான். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் அண்ணன் செல்வராகவன் கடந்த மாதம் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தனுஷ் வீட்டில் நடந்த பிரச்சனை அறிந்து தான் செல்வராகவன் கடந்த மாதம் இந்த பதிவு மூலம் தனுஷுக்கு கருத்து சொல்லியிருப்பார் என கூறப்படுகிறது.

அந்த பதிவில், தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்.

இதையும் படியுங்களேன் ….. நயன்தாரா சொன்னதை நிறைவேற்றிய தளபதி விஜய்.! இது என்ன புது கதையா இருக்கே.!?

இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Manikandan
Published by
Manikandan