">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பலான படத்தால் பல கோடி வருமானம்… போலீசுக்கே ஷாக் கொடுத்த நடிகை
மும்பையை சேர்ந்த பிரபல நடிகை பலான படங்களை தயாரித்து வந்ததில் பல கோடி ரூபாய் சம்பாரித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் நடிகை கெஹானா வசிஸ்த். இவர் 2012ம் ஆண்டு மிஸ் ஆசியா பிகினி போட்டியில் வென்று இருக்கிறார். கெஹானா தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு பெண்களை நடிக்க அழைத்து வந்து, ஆபாசப்படம் எடுத்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. ஏறத்தாழ 87 வீடியோக்களை எடுத்ததன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் சம்பாரித்து இருப்பார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் கெஹானாவையும் அவரின் கூட்டாளிகளையும் காவல்துறை கைது செய்தது.
தொடர்ந்து, அவரின் கூட்டாளியாக இருந்தவர் யஷ் தாக்கூர். அவர் சிங்கப்பூரில் வசித்து வருவதாகவும், தன்னை என்.ஆர்.ஐ எனவும் கூறிக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து, அவரது இரண்டு வங்கி கணக்கின் மூலம் 5கோடி ரூபாய் இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாலிவுட் இந்த பிரச்சனையை சந்தித்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.