">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்னை ரேப் செய்து கொன்று விடுவார்களோ என பயந்தேன் – கதறிய விஜய் பட நடிகை!
பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் செய்த நிலையில் இப்போது அவருக்கு எதிராகவே புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் செய்த நிலையில் இப்போது அவருக்கு எதிராகவே புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் அமிஷா படேல். தமிழில் விஜய்யோடு புதிய கீதை படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிந்துள்ள நிலையில் அவர் பிரகாஷ் சந்திராவுக்கு எதிராக புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
அவர் புகாரின் படி ‘என்னை பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அடிமை போல நடத்தினர். எனது காரைச் சுற்றி அடியாட்களை நிறுத்தினர். பிரகாஷைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று எனக்குக் குறும்செய்தி அனுப்பினார். எனக்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. அதனால் அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.