">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூர்யாவால் மாட்ட இருந்த கார்த்தி… காப்பாற்றிய தளபதி… கோலிவுட்டின் புது ட்விஸ்ட்…
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
�
தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கொரோனாவிற்கு முன், பின் என பிரிக்கும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் துவங்கி சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் கூட ஓடிடிக்கு வந்து விட்டது. முதலில் ஓடிடியில் வெளியான சில படங்கள் மொக்கையாகவே இருந்தன. ஆனால், அதற்கு அடுத்ததாக சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற ஹிட் படங்கள் வெளியாகின. இதனால் கோலிவுட் ஓடிடிக்கென்றே படம் எடுக்க துவங்கி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தினையும் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில், விஜயின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியானது. என்ன நடக்குமோ என நினைத்திருந்த கோலிவுட்டினருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தன. கூட்டம் அலைமோத படமும் ஹவுஸ்புல் காட்சிகளாக அமைந்தது. இதனால் ஓடிடிக்கு செல்ல இருந்த சுல்தானை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, ஏப்ரல் 2ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.